என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

புதன், அக்டோபர் 12, 2011

சூர்யாவிற்கு வாழ்வு தந்த அஜித்

சூர்யாவிற்கு வாழ்வு தந்த அஜித் 

சூர்யா திரைவுலகிற்குள் நுழைய காரணமே அஜித் என்று சொன்னால் , நீங்கள் நம்புவீர்களா ? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் . 

1997 ஆம் ஆண்டு இயக்குனர்  வசந்த், அஜித் விஜய் இருவரையும் இணைத்து நேருக்கு நேர் என்ற படத்தை ஆரம்பித்தார் ,அஜித்தும் 10 நாட்கள் வரை நடித்து விட்டு திடீரென விலகி கொண்டார் , கால்ஷீட் பிரச்சனை தான்  காரணமாக சொல்லப்பட்டது .(ஆனால் பின்னணியில் டாக்டர் அணிலின் தந்தை இருந்தார் என்று கிசுகிசுக்க பட்டது )

பிறகு வசந்த் வேறு ஒரு நடிகரை தேட ,   திருப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நடிகர் சிவகுமாரின் மகன் சரவணனை பார்த்து சூர்யாவாக மாற்றினார்!! ஆக , சூர்யா என்ட்ரி ஆனதே அஜித் அவுட் ஆனதால்தான் !!!

சேது என்றொரு மகத்தான படைப்பை உருவாக்கி ,இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பாலா தனது அடுத்த (நந்தா )படத்தில் நடிக்க வைக்க விரும்பியது அஜித்தை ,ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பு இருவருக்கும் கருத்துவேறுபட்டு பிரிந்துவிட்டார்கள் ! நேருக்கு நேர் படத்திற்கு பிறகு 2 , 3  படத்தில் நடித்திருந்தாலும்  கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட சூர்யாவுக்கு அடித்தது லக் ,  சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது நந்தா தான் என்றாலும், திருப்புமுனை ஏற்பட காரணமாய் இருந்தது அஜித்.


நந்தா படத்தில் சிறந்த நடிகர் என்று பேர் வாங்கி விட்டாலும் , வெற்றி பட ஹீரோக்கள் வரிசையை பிடிப்பது எட்டாகனியாகவே இருந்தது சூர்யாவிற்கு . 


மின்னலே வெற்றிக்கு பிறகு கௌதம் போலீஸ் கதையொன்றை அஜித்தை வைத்து ஆரம்பித்தார் , வழக்கம் போலவே ட்ராப் ஆகிவிட , சூர்யா உள்ளே  வந்தார் ,படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சூர்யாவையும் முன்னணி ஹீரோவாக்கியது! அதோடு ஜோதிகாவுடன் நெருக்கமும் அதிகரித்தது !!

ஏ.ஆர்.முருகதாஸ் தீனாவிற்கு பிறகு அஜித்தோடு மீண்டும் கைகோர்த்த படம் "மிரட்டல் " , இம்முறை தயாரிப்பாளரோடு ஏற்பட்ட பிரச்சனையால் படம் ட்ராப் ஆனது பிறகு கஜினி என்று பெயர் மாறி  சூர்யாவை வசூல் நாயகனாக மாற்றியது .

இப்போது புரிகிறதா  தலைப்பிற்க்கான அர்த்தம் ?! தெரிந்தோ தெரியாமலோ அஜித் சூர்யாவிற்கு வாழ்வு தந்திருக்கிறார் என்பது உண்மைதானே ?!!!

                 எழுதியது ---- கிளாமங்கலம் - விஜய சிலம்பரசன்  
                                        

3 கருத்துகள்: