என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

புதன், அக்டோபர் 19, 2011

ஷங்கர் டக்கர் என்னும் உன்னத கலைஞன்(இசை)

ஷங்கர் டக்கர் என்னும் உன்னத கலைஞன் :



போதி குருமன் யாரென்று, சாரி போதி தருமன் யாரென்று இந்தியாவே எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் ஷங்கர் டக்கர் யாரென்று தெரிந்து கொள்வோமா?

நம்ம ஒரு அப்பாடக்கருங்க , ஆங்கில ஹிப் பாப் ஆல்பத்தை காப்பி அடிபதையும்        , கேட்பதையுமே பெருமையாக நினைக்கும் கலிகாலத்தில் , பாஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த ஷங்கர் டக்கர் , இந்திய இசையை , குறிப்பாக கர்நாடக சங்கீதத்தை காதலித்து, இசைஅமைத்து youtube channel ல் பெரிய ரசிகர் பட்டாளதையே உருவாக்கி ,இப்போது மும்பையில் வசிக்கும் ஷங்கர் டக்கர் உண்மையிலேயே பெரிய அப்பாடக்கர் தான்!!!

இந்த பாடலை நம்ம ஊரு ஆளுங்க பாடியதை கேட்டால் தலையை என்னமோ பண்ணும் , ஆனால் நம்ம ஷங்கரின் இசை அமைப்பில் கேக்கும்போது அடடா இதயத்தை என்னவோ செய்கிறது ! இந்த பாடலை பாடியிருக்கும் வித்யா -வந்தனா அவ்ளோ அழகு !!


 Hariprasad Chaurasia, Zakir Hussain, John Mclaughlin, Radio Head, AR Rahman  ஆகியோரின் ஆசிபெற்றவர் !!!

நம்ம AR Rahman  ன் முன்பே வா பாடலை ரீமிக்ஸ் இல்லை ரீமேக் செய்திருக்கும் நேர்த்தியை பாருங்கள் (எல்லா இசை கருவியும் இவரே வாசித்திருப்பார் !!


I love you Shankar Tucker.

எழுதியது கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .

புதன், அக்டோபர் 12, 2011

சூர்யாவிற்கு வாழ்வு தந்த அஜித்

சூர்யாவிற்கு வாழ்வு தந்த அஜித் 

சூர்யா திரைவுலகிற்குள் நுழைய காரணமே அஜித் என்று சொன்னால் , நீங்கள் நம்புவீர்களா ? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் . 

1997 ஆம் ஆண்டு இயக்குனர்  வசந்த், அஜித் விஜய் இருவரையும் இணைத்து நேருக்கு நேர் என்ற படத்தை ஆரம்பித்தார் ,அஜித்தும் 10 நாட்கள் வரை நடித்து விட்டு திடீரென விலகி கொண்டார் , கால்ஷீட் பிரச்சனை தான்  காரணமாக சொல்லப்பட்டது .(ஆனால் பின்னணியில் டாக்டர் அணிலின் தந்தை இருந்தார் என்று கிசுகிசுக்க பட்டது )

பிறகு வசந்த் வேறு ஒரு நடிகரை தேட ,   திருப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நடிகர் சிவகுமாரின் மகன் சரவணனை பார்த்து சூர்யாவாக மாற்றினார்!! ஆக , சூர்யா என்ட்ரி ஆனதே அஜித் அவுட் ஆனதால்தான் !!!

சேது என்றொரு மகத்தான படைப்பை உருவாக்கி ,இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பாலா தனது அடுத்த (நந்தா )படத்தில் நடிக்க வைக்க விரும்பியது அஜித்தை ,ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பு இருவருக்கும் கருத்துவேறுபட்டு பிரிந்துவிட்டார்கள் ! நேருக்கு நேர் படத்திற்கு பிறகு 2 , 3  படத்தில் நடித்திருந்தாலும்  கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட சூர்யாவுக்கு அடித்தது லக் ,  சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது நந்தா தான் என்றாலும், திருப்புமுனை ஏற்பட காரணமாய் இருந்தது அஜித்.


நந்தா படத்தில் சிறந்த நடிகர் என்று பேர் வாங்கி விட்டாலும் , வெற்றி பட ஹீரோக்கள் வரிசையை பிடிப்பது எட்டாகனியாகவே இருந்தது சூர்யாவிற்கு . 


மின்னலே வெற்றிக்கு பிறகு கௌதம் போலீஸ் கதையொன்றை அஜித்தை வைத்து ஆரம்பித்தார் , வழக்கம் போலவே ட்ராப் ஆகிவிட , சூர்யா உள்ளே  வந்தார் ,படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சூர்யாவையும் முன்னணி ஹீரோவாக்கியது! அதோடு ஜோதிகாவுடன் நெருக்கமும் அதிகரித்தது !!

ஏ.ஆர்.முருகதாஸ் தீனாவிற்கு பிறகு அஜித்தோடு மீண்டும் கைகோர்த்த படம் "மிரட்டல் " , இம்முறை தயாரிப்பாளரோடு ஏற்பட்ட பிரச்சனையால் படம் ட்ராப் ஆனது பிறகு கஜினி என்று பெயர் மாறி  சூர்யாவை வசூல் நாயகனாக மாற்றியது .

இப்போது புரிகிறதா  தலைப்பிற்க்கான அர்த்தம் ?! தெரிந்தோ தெரியாமலோ அஜித் சூர்யாவிற்கு வாழ்வு தந்திருக்கிறார் என்பது உண்மைதானே ?!!!

                 எழுதியது ---- கிளாமங்கலம் - விஜய சிலம்பரசன்  
                                        

திங்கள், அக்டோபர் 03, 2011

வாகை சூடிய சற்குணம்

வாகை சூடிய சற்குணம் :

களவாணி யின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் வந்திருக்கும் , வாகை சூடவா எந்த வகையில்  சர்குனதிற்கு  வாகை சூடியிருக்கிறது என்று பார்ப்போம் . 1966 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுத்திருக்கிறார் . செங்கல் சூளை தொழில் செய்யும்    ஒரு கிராமமே  ஆண்டை பொன்வண்ணனின் அடிமைகளாக    இருக்கிறது! கல்வியறிவு இல்லாத மக்களின் உழைப்பை உறிஞ்சி , சம்பளமாக குறைவான கூலியை தருகிறார் !

இந்நிலையில் அந்த கிராமதிற்கு , கிராம சேவா அமைப்பில் இருந்து வாத்தியார் உத்தியோகம் பார்க்க வரும் விமல் !



அங்குள்ள  குழந்தைகளின் அறியாமை யை  போக்கி , அந்த கிராமத்து பெண்ணையே , திருமணமும் செய்கிறார் .


இந்த கதையை உலக சினிமா தரத்திற்கு எடுத்திருக்கிறார் , உலக சினிமா வை காபி அடிக்காமல் !!

திரையில் M.G.R ய் நம்பியார் அடிக்கும் காட்சியை பார்த்து குறவர்  துப்பாக்கியால் திரையை சுடும் ஆரம்ப காட்சியே அமர்க்களம் !
சிறுவர்களிடமும் , ஆட்டுகாரநிடமும் விமல் மாட்டிக்கொண்டு  முழிக்கும் ஆரம்ப காட்சிகள் கல கல ...,. அறிமுக நாயகி இனியாவின் அழகும் நடிப்பும் பாரதிராஜா வின் கதாநாயகியை நினைவுட்டுகிறது .
குருவிக்காரனின் மேக் அப்பும் அவரது பின்னணியும் சினிமாவிற்கு புதியது ,பாக்யராஜ் , பொன்வண்ணன் இருவரும் நான்கைந்து காட்சிகளே வந்தாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிரர்கள்.

தஞ்சாவூர் வட்டார  பேச்சு வழக்கை அற்புதமாக கையாண்டுள்ளார் , (அக்காவை "அக்காயி" என்று அழைப்பது ) எங்க அண்ணையா சற்குணம் !
குருவிக்காரனின் மரணத்துக்கு பிறகு வைக்கும் ஒப்பாரியில்  அசல் தஞ்சை கிராமத்தை கண் முன் நிறுத்துகிறார் அண்ணையா . 
1960  இல் நடக்கும் கதையென்பதால் பார்த்து பார்த்து நிறைய விசயங்களை  சேர்த்துள்ளார் கலை இயக்குனரோடு கை கோர்த்து. இலங்கை வானொலியும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது .
படத்தின் இரு பெரும் தூண்கள் இசையும் கேமராவும் ! ஒவ்வொரு காட்சியும் சிற்பம் போல் செதுக்கி இருக்கிறார் இயக்குனர் என்றால், ஓம் பிரகாஷின் ஒளிபதிவிலோ  கவிதையும் ஓவியமும் சேர்ந்து இருக்கிறது! படம் முழுக்க மஞ்சள் நிறதில்  லைட்டிங்  அமைத்து  கலக்கியிருக்கிறார்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தது ஜிப்ரன் தான் . பின்னணியிலும் பாடல்  களிலும் உயிரோட்டமான இசை ! மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது !

  கேவலமான பொறாமை பிடித்து  இந்த படத்தை பற்றி தவறாக பேசுபவர்களை  , (படத்தில் சிறுவன் ஒருவன், "தேடியும் ஆப்டலை சார்" என்பதை தவறாக புரிந்து கொண்டு விமல் வெளுப்பர்) அந்த வார்த்தையை கொண்டுதான் நாம் திட்ட வேண்டும் !

படத்தை பற்றி விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒரு புத்தகமே போடலாம் !!

திரையில் ஒரு இலக்கியத்தை படைத்திருக்கும் எங்கள் அண்ணையா சற்குணத்தை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்க வேண்டும் போல் இருந்தது ! படம் முடிந்தவுடன் !


  எழுதியது : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .