என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

வியாழன், செப்டம்பர் 29, 2011

ஏழாம் அறிவு பாடல்களும் ஹாரிஸ் ஜெயராஜின் அயோக்யதனமும்

ஏழாம் அறிவு பாடல்களும்  ஹாரிஸ் ஜெயராஜின் அயோக்யதனமும்
    
காபி அடிப்பதற்கும்  தனி திறமை  இருக்க வேண்டும் , நம்ம G.V. தேவா போல் !  எங்கேருந்து சுட்டது என கண்டு பிடிபதர்க்குள் பாடல் அனைத்தும் ஹிட் ஆகி விடும்.!!

ஆனால் நம்ம ஹரிஸ் க்கு  அந்த திறமை சுத்தமாக இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபித்துள்ளார் . 
1 )  டாக்ஸி டாக்ஸி + அயன் +கோ= ரிங்கா சாங்
2) கண்ணும் கண்ணும் நோக்கியா+இரும்பிலே  ஒரு = ஏலே லாமா
3) கண்ணே கலை மானே +இளையராஜாவின் சோக பாடல்கள் =யம்மா யம்மா 
4) கப்பலேறி போயாச்சு + அச்சம் அச்சம் இல்லை + ஜன கன மன = தோழா 
5) 12 B பூவே வாய் பேசும் + ரஹ்மான் மெலோடிஸ் = முன் பனி
6) குரு படத்தில் வரும் நம்தரே நம்தரே + ஒன்ஸ் அபான் டைம் இன் சீனா =  சீன      
                                                                                              மொழி பாடல் !

ஏ.ஆர்.முருகதாஸ் க்கு இது ஒருஒரு பாடம் , இனிமேலாவது, இந்த காபிராஜிடம்   
சிக்காமல் இருக்க வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம் !!! 


அடுத்த படியாக  ஹாரிஸ் ஷோ நடத்த போகிறாராம்  மாட்டிக்கொள்ள போகிறார் ! ஒரே  விதமான மெட்டு போட்டு மொக்கை போடுவது  கொஞ்சம் நஞ்சம் பேருக்காவது , தெரியாமல் இருந்தது ! ஆனால் இனி ?????


வியாழன், செப்டம்பர் 22, 2011

திரைப்பார்வை

எங்கேயும்   எப்போதும் :   
முதல் காட்சியிலேயே கிளைமாக்ஸ்  வைப்பதற்கு ஒரு தனி  தில்  வேண்டும்,   அறிமுக  இயக்குனர் சரவணனிடம் நிறையவே இருக்கிறது ! இப்படி ஒரு படத்தை  சொந்தமாக தயாரித்த ஏ.ஆர் .முருகதாஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல! திருச்சி டு சென்னை , சென்னை டு திருச்சி செல்லும் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேராக மோதிக்கொள்கிறது  முதல் காட்சியிலேயே , அந்த பேருந்தில் பயணம் செய்யும் முக்கிய கதாபாத்திரங்களான ஜெய் , அஞ்சலி , ஷ்ரவன் , அனன்யா. இவர்களின் ப்ளாஷ்பாக் கும்  தான் இரண்டரை மணி நேர காவியமாய் செதுக்கி இருக்கிறார் சரவணன்.
              
திகில் படத்துக்கே உரிய பரபரப்பான வேகத்தில் பேருந்தை விட வேகமாக செல்கிறது திரைக்கதை, இம்மாதிரியான  படங்களுக்கு திரைக்கதைதான் முதுகெலும்பு ! சின்ன கேரக்டர் களும் படத்தில் கலக்கல். அனனியாவின் அக்கா , மனைவியை விட்டு பிரிய முடியாமல் பேருந்தில் கூடவே வரும் கணவன், பேருந்தில் ஏறிய பெண்ணை பார்த்த வுடன் காதலிக்கும்
romeo . என பட்டியல் நீள்கிறது !

ஷ்ராவந்த் அனன்யா இருவருக்கும் இருக்கும் காதல் தென்றல் என்றால் , ஜெய் அஞ்சலி சிவகாசி பட்டாசு ! கிட்டத்தட்ட லேடி கார்த்திக் அஞ்சலி ( மௌன ராகம் கார்த்திக்) இப்படி ஒரு பையன் நமக்கு கிடைக்க மாட்டானா என எல்லா பெண்களையும் ஏங்க வைக்கும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார் ஜெய்.




மியூசிக் காமிரா இரண்டும் படத்தை இன்னும் விறு விருப்பாக்கி இருக்கிறது ! வசனமும் அருமை ,அனன்யா ஸ்ர்வந்திடம் " மொதல்ல நீங்க யாருன்னு தெரியல அதனால பயமா இருந்துச்சு  , இப்போ நீங்க யாருன்னு தெரிஞ்சதால பயமா இருக்கு " என்று சொல்லும் இடம்  கவிதை ! கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரிங்க்டோன் " அப்பா போனை எடுங்கப்பா " இந்த காட்சியை பார்த்தால் கல் நெஞ்சும் கலங்கி விடும் !

படம் முடிந்த பிறகு, டைரக்டர்  இந்த ஜோடியை ஏண்டா  பிரிச்சான், கடைசி 15  நிமிடம் இவ்வளவு சோகம் தேவைதானா, இனிமேலாவது குடிதுவிட்டோ செல் போன் பேசிகொன்டோ செல்ல கூடாது; இம்மாதிரியான விவாதம் கண்டிப்பாக இருக்கும் ரசிகர்களிடம், அதுதான் டைரக்டர் ரின் வெற்றி ! குருவை மிஞ்சிய சிஷ்யன் !!

எனக்கு என்ன பயம்னா , தீபாவளிக்கு சென்னை டூ திருச்சி பஸ்ல போறதா வேண்டாமா என்பது தான்!

எழுதியது

-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன்

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

மயக்கம் என்ன : இசை விமர்சனம்

G.V.பிரகாஷ் +செல்வா என்றதும் எதிர்ப்பார்த்து கேட்டால் ஏமாற்றமே !
வழக்கம் போல தனது பாடல்களையே ரீமிக்ஸ் செய்து உள்ளார் !! பாடல்களில் கற்பனை வறட்சி அதிகம் , தனுஷும் செல்வாவும் பாட்டு எழுதினால் பிறகெப்படி இருக்கும் !!! யுவன் + செல்வா+நா.முத்துக்குமார் இவர்களிடம் இருந்த உயிர்ப்பான இசை இல்லை இந்த ஆல்பத்தில் என்பதே உண்மை !

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே !
-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .