வாகை சூடிய சற்குணம் :
களவாணி யின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் வந்திருக்கும் , வாகை சூடவா எந்த வகையில் சர்குனதிற்கு வாகை சூடியிருக்கிறது என்று பார்ப்போம் . 1966 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுத்திருக்கிறார் . செங்கல் சூளை தொழில் செய்யும் ஒரு கிராமமே ஆண்டை பொன்வண்ணனின் அடிமைகளாக இருக்கிறது! கல்வியறிவு இல்லாத மக்களின் உழைப்பை உறிஞ்சி , சம்பளமாக குறைவான கூலியை தருகிறார் !
இந்நிலையில் அந்த கிராமதிற்கு , கிராம சேவா அமைப்பில் இருந்து வாத்தியார் உத்தியோகம் பார்க்க வரும் விமல் !
அங்குள்ள குழந்தைகளின் அறியாமை யை போக்கி , அந்த கிராமத்து பெண்ணையே , திருமணமும் செய்கிறார் .
இந்த கதையை உலக சினிமா தரத்திற்கு எடுத்திருக்கிறார் , உலக சினிமா வை காபி அடிக்காமல் !!
திரையில் M.G.R ய் நம்பியார் அடிக்கும் காட்சியை பார்த்து குறவர் துப்பாக்கியால் திரையை சுடும் ஆரம்ப காட்சியே அமர்க்களம் !
சிறுவர்களிடமும் , ஆட்டுகாரநிடமும் விமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஆரம்ப காட்சிகள் கல கல ...,. அறிமுக நாயகி இனியாவின் அழகும் நடிப்பும் பாரதிராஜா வின் கதாநாயகியை நினைவுட்டுகிறது .
குருவிக்காரனின் மேக் அப்பும் அவரது பின்னணியும் சினிமாவிற்கு புதியது ,பாக்யராஜ் , பொன்வண்ணன் இருவரும் நான்கைந்து காட்சிகளே வந்தாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிரர்கள்.
தஞ்சாவூர் வட்டார பேச்சு வழக்கை அற்புதமாக கையாண்டுள்ளார் , (அக்காவை "அக்காயி" என்று அழைப்பது ) எங்க அண்ணையா சற்குணம் !
குருவிக்காரனின் மரணத்துக்கு பிறகு வைக்கும் ஒப்பாரியில் அசல் தஞ்சை கிராமத்தை கண் முன் நிறுத்துகிறார் அண்ணையா .
1960 இல் நடக்கும் கதையென்பதால் பார்த்து பார்த்து நிறைய விசயங்களை சேர்த்துள்ளார் கலை இயக்குனரோடு கை கோர்த்து. இலங்கை வானொலியும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது .படத்தின் இரு பெரும் தூண்கள் இசையும் கேமராவும் ! ஒவ்வொரு காட்சியும் சிற்பம் போல் செதுக்கி இருக்கிறார் இயக்குனர் என்றால், ஓம் பிரகாஷின் ஒளிபதிவிலோ கவிதையும் ஓவியமும் சேர்ந்து இருக்கிறது! படம் முழுக்க மஞ்சள் நிறதில் லைட்டிங் அமைத்து கலக்கியிருக்கிறார்!
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தது ஜிப்ரன் தான் . பின்னணியிலும் பாடல் களிலும் உயிரோட்டமான இசை ! மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது !
கேவலமான பொறாமை பிடித்து இந்த படத்தை பற்றி தவறாக பேசுபவர்களை , (படத்தில் சிறுவன் ஒருவன், "தேடியும் ஆப்டலை சார்" என்பதை தவறாக புரிந்து கொண்டு விமல் வெளுப்பர்) அந்த வார்த்தையை கொண்டுதான் நாம் திட்ட வேண்டும் !
படத்தை பற்றி விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒரு புத்தகமே போடலாம் !!
திரையில் ஒரு இலக்கியத்தை படைத்திருக்கும் எங்கள் அண்ணையா சற்குணத்தை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்க வேண்டும் போல் இருந்தது ! படம் முடிந்தவுடன் !
எழுதியது : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக